
சென்னை: பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலச் செயலாளர் சா.ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் பலமாவட்டங்களில் ஜூன் 30-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இதனால், 5 மாவட்ட கல்வி அலுவலர் காலிப்பணியிடம் உருவானது.இந்த பணியிடத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரையும், 4 உயர்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களும் பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்