
பழநி: பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள், பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பவர்களாக கருதப்படுவார்கள் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் நேற்று (ஜூலை 8) மாலை பழநி தண்டாயுதபாணி நிலையத்துக்கு வந்தார். அவரை, பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், வருவாய் கோட்டாட்சியர் சரவணன், வட்டாட்சியர் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்