
ராமநாதபுரம்: வரும் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து பாஜக வேட்பாளர் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை இன்று மாலை ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் இருந்து தொடங்கி கேணிக்கரை வழியாக அரண்மனையை வந்தடைந்தார். பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரண்மனை முன்பு அவர் பேசியதாவது, "தமிழகத்தின் மண்ணையும், மக்களையும் நேசிக்கக் கூடியவர் பிரதமர் மோடி. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.10.76 லட்சம் கோடி நிதியை பிரதமர் வழங்கியுள்ளார். பிரதமர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ் மொழி தொன்மையானது என செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார். திருக்குறளை 100 மொழிகளில் மொழிபெயர்க்க கூறியுள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் கூற்றை ஐ.நா. சபையில் தெரிவித்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார். நாடாளுமன்றத்தில் தமிழ் கலாச்சாரத்தின் செங்கோலை வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்