
தருமபுரி: கட்டிட தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் வகையிலான கல்குவாரிகள் போராட்டத்துக்கு அரசு தீர்வு காண வேண்டும் என தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நடந்த ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநிலக் குழு கூட்டம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுக் குழு கூட்டம் நேற்று முன்தினம் (ஜூலை 3) தொடங்கி 2 நாட்கள் நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் ரவி தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் முனுசாமி, மாநில பொருளாளர் முருகன், செயலாளர்கள் பாலன் சேது, சங்கர், சின்னசாமி, துரைசாமி, ஸ்ரீநந்தினி, தில்லைவனம், வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்