
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சாரல் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் சாலைகளில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. குற்றால சீசன் தொடங்கிய நிலையில் மழைநீர் நிறைந்த சாலைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியதை அடுத்து தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்