
தருமபுரி: அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்கள் பச்சிளம் குழந்தைகளுடன் வீடு திரும்ப 2 குளிர்சாதன வாகனங்களை தொகுதி நிதி மூலம் தருமபுரி மக்களவை உறுப்பினர் வழங்கியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளுக்கு பிரசவ சிகிச்சைக்கு வரும் பெண்கள் பிரசவம் முடிந்த பின்னர் தங்களின் பச்சிளம் குழந்தைகளுடன் வீடு திரும்ப ஆம்புலன்ஸ் வாகனங்களில் செல்ல தயக்கம் காட்டி வந்தனர். இதையறிந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பிரசவித்த பெண்கள் குழந்தைகளுடன் வீடு திரும்ப உதவும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வாகனங்கள் வழங்க முடிவு செய்தார். அதற்காக ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்