
சென்னை: ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்று தெரிவித்த நீதிபதிகள், அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதால் உங்களுக்கு என்ன பாதிப்பு என்று, மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவரிடம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமியிடமும் தரப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்