
கரூர்: வீரணம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம திரவம் கலக்கப்பட்டது தொடர்பாக எஸ்.பி. வட்டாட்சியர் ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 159 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் 3 குடிநீர் தொட்டிகள் உள்ளன. இன்று (ஜூலை 12ம் தேதி) காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு குடிநீர் தொட்டி குழாயை திறந்துள்ளனர். தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்