
மதுரை: மதுரை நகரில் பாதாளசாக்கடைக்காகவும், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டிய குழிகளை ஒப்பந்தப் பணியாளர்கள் முறையாக மூடாமல் சென்றுவிடுதால் சாலைகளில் மண் மேடுகளும், பள்ளங்களும் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் பயணிபதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை, பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடக்கின்றன. இந்த இரு பணிகளையும் முடிந்த சாலைகள், தெருக்களில் மட்டுமே மாநகராட்சி புதிய சாலைகளை போடுகிறது. முதற்கட்டமாக பாதாள சாக்கடைப் பணிக்காக சாலைகளையும், தெருக்களையும் ஜேசிபிகளை கொண்டு தோண்டும் டெண்டர் எடுத்த நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியார்கள், அதன் குழாய்களையும், தொட்டிகளையும் பதிக்க 2 முதல் 3 மாதம் காலம் எடுத்துக் கொள்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்