
தருமபுரி: தருமபுரியில் வன விலங்கு வேட்டைக்கு உதவும் பிரத்யேக ஹாரன் விற்ற எலெக்ட்ரானிக் பொருள் விற்பனையாளர்கள் 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
வனக் குற்றங்களை தடுத்தல், வனத்தில் பசுமைப் பரப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகளில் தருமபுரி மாவட்ட வனத்துறை அண்மைக் காலமாக தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக வன விலங்குகளை வேட்டையாடுவோரை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது வேட்டைக்காரர்களுக்கு முயல் ஹாரன் விற்ற எலெக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்