
மேட்டூர்: மேட்டூர் காவிரி பாலத்தில் விதிமீறிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேட்டூர் காவிரி பாலம் மிகவும் பழமையானது ஆகும். இந்த பாலத்தின் வழியாகத் தான் தொடக்கத்தில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் சேலம் கேம்ப், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவந்தன. இந்த பாலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் வலுவிழுந்தது. இதையடுத்து பாலம் சீரமைக்கப்பட்டு 2003-ம் ஆண்டு முதல் இலகு ரக வாகனப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்