
பரமக்குடி: மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பரமக்குடியில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்குகிறது. பாஜக ஆளாத மாநிலத்தில் குறைந்த அளவிலான நிதியை அளிக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை படிப்டியாக நிறைவேற்றி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்