
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தில் வசித்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றிவிட்டு, போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயருக்கு பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்