
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் வனத்துறை கண்காட்சி அரங்கில் இடம்பெற்றிருந்த உண்ணிக் குச்சி யானைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வளாகத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் வனத்துறை சார்பிலும் ஓர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கையொட்டி உண்ணிக் குச்சிகளால் தயார் செய்யப்பட்ட பெரிய யானை ஒன்றும், குட்டி யானை ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. நிஜ யானைகளைப் போன்றே மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த யானைகள் பார்வையாளர்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்