
விழுப்புரம்: சர்வதேச அளவிலான சவால்களுக்கு நீடித்த தீர்வுகளை வழங்கி,உலகை வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது என்று ஆரோவில் சர்வதேச நகரில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக வருகை தந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று, அரவிந்தர் ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்துக்கு சென்றார். அவரை தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், விழுப்புரம் ஆட்சியர் பழனி, எஸ்.பி. சஷாங்க் சாய், கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்