
மேட்டூர்: மேட்டூர் அருகே வேலூர் குடிநீர் நீரேற்று நிலையம் அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
மேட்டூர் தொட்டில்பட்டி அருகே வேலூர் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இதன் அருகே பி.என்.பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் நகராட்சி குப்பை, சிறு, குறு தொழிற்பேட்டை கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக மாறியுள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென தீப்பிடித்து, தீ மளமளவென எரிந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்