
சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தங்கள் உரையின் நடுவே பாரதியார் கவிதை, திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழில் பேசியது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபகாலமாக முக்கிய தலைவர்கள் பலரும் திருக்குறள் மற்றும் பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசி, தமிழுக்கு புகழ் சேர்த்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, தான் செல்லும் நாடுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி, தமிழின் சிறப்புகளை கூறி வருகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரைகளின்போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்