
விருதுநகர்: மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஆளுநர் துணைபுரிந்துகொண்டிருக்கிறார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு மருத்துவமனை கட்டிடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்றபோது அவர் அளித்த பேட்டியில், "மத்திய அரசால் தமிழக அரசு மருத்துமனைகளுக்கு வழங்கப்பட்ட லக்சயா சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு 34ம், கடந்த ஒரே ஆண்டில் 43ம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மத்திய அரசு சான்றிதழ் பெற்றுள்ள மொத்த எண்ணிக்க 77. கடந்த ஓராண்டில் மட்டும் 43 சான்றிதழ்கள் பெற்றுள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்