
சிவகாசி: 'நீட் விலக்கு மசோதா குறித்த ஆளுநரின் பேச்சு அவரது அகங்காரத்தை காட்டுகிறது. ஆளுநர் ரவியின் பேச்சு தமிழகத்தில் மோடி மீதான வெறுப்பை ஒருங்கிணைக்கும்' என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார்.
சிவகாசியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், சிவகாசி எம்எல்ஏ அசோகன் ஆகியோர் மீனம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் கூறியதாவது, "மாணவர்கள் மத்தியில் ஜாதி மற்றும் பிரிவினை உணர்வு வராமல் தடுப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. நாங்குநேரியில் நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் தமிழகத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெறுப்பு அரசியலின் மையமாக இருக்க கூடிய பல அமைப்புகள் இதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்தி குளிர்காய நினைக்கிறது. மாணவர்களிடையே வளரும் வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலானது தமிழக வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்