
சென்னை: ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் நேற்று (ஆக.3) தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா - சீனா அணிகளுக்கு இடையிலான போட்டியை மாணவர்களுடன் அமர்ந்து பார்த்திருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்தியா - சீனா இடையிலான போட்டியில் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்