
சென்னை: மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் எல்இடி பல்புகளை பொருத்தும் திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்தாததால், மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடி நிதியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் எல்இடி பல்ப், டியூப்லைட் உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துமாறு மக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்