
சென்னை: என்எல்சி பணியின்போது சேதமான நெற்பயிர்களுக்கு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் கணக்கிட்டு விவசாயிகளுக்கு ஆக.6-ம் தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று என்எல்சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் செப்.15-க்குள் அறுவடை பணிகளை முடித்து, அந்த நிலங்களை என்எல்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 2-ம் கட்ட சுரங்க விரிவாக்கபணிகளுக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் கடந்த 2007-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டன. மழை காலத்தில் என்எல்சி சுரங்கம்மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏற்படும் வெள்ள சேதத்தை தடுக்கும் நோக்கில், பரவனாறு ஆற்றை ஆழப்படுத்தி, இந்த நிலங்களின் வழியே மாற்று வழித்தடத்தில் கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்