
சென்னை: நாட்டின் 6 குடியரசுத் தலைவர்கள், நோபல் விருதாளர்கள் என்று எண்ணற்ற மேதைகளை உருவாக்கியதன் மூலம் கற்றலின் புகலிடமாக சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது என்று சென்னையில் நடைபெற்ற 165-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, சென்னை அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். மேலாண்மை கல்வி படிப்பில் ‘கிரேட் பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா இடையே உயர்கல்வியில் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டப் படிப்பை முடித்த விஐடி பல்கலைக்கழக துணை தலைவர் ஜி.வி.செல்வம், பொருளாதார துறையில் ‘மத்திய அரசின் நிதி பகிர்வால் மாநிலங்களின் வளர்ச்சி, பொது செலவினம், வருவாயில் ஏற்படும் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டப் படிப்பை முடித்த முன்னாள் தலைமைச் செயலர் கே.சண்முகம் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்