
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் ரூ.22 லட்சம் ரொக்கம், ரூ.16.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள், 60 நில சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பண மோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய கரூர், திண்டுக்கல், கோவை, நாமக்கல் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த 3-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்