
சென்னை: ராகுல் காந்தியின் எம்.பி பதவி இழப்பு வழக்கில் பாஜகவின் சூழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் வீழ்ந்து விட்டதுஎன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மோடி என்ற குடும்பப் பெயர் உள்ளவர்கள் திருடர்களாக இருப்பது எப்படி?' என்று 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். மறுநாளே ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்