
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
அதேநேரம், பயணிகள் போர்வையில் வரும் சிலர், செல்போன், நகை திருட்டில் ஈடுபடுகின்றனர். சிலர், கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களில், கணக்கில் காட்டாத பணத்தை எடுத்து வந்து பிடிபடும் நபர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்