
மதுரை: வரைபட அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோரிடம் மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரியை 5 முதல் 10 மடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் சங்கர், சுப்பிரமணியன். இவர்கள் கோச்சடை பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் 2015-ல் 10896.5 சதுர மீட்டர் இடம் வாங்கினர். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட 23.2.2018ல் வரைபட அனுமதி பெற்றனர். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் வரைபட அனுமதி அடிப்படையில் வணிக வளாகம் கட்டப்படவில்லை என்றும், கட்டிடத்தில் விதிமிறல் இருப்பதாகவும் கட்டுமானப் பணியை நிறுத்துமாறு 25.1.2023ல் மதுரை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். 25.1.2023ல் நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் கட்டிடத்தை சீல் வைக்கவும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்