
தூத்துக்குடி: சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இதனிடையே, தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது, “நேற்று முன்தினம் சனாதன தர்ம விழாவில் நான் எதைச் பேசினேனோ திரும்பத் திரும்பச் அதையே சொல்வேன். சனாதன விவகாரத்தில் நான் இந்துக்களை மட்டுமல்ல, எல்லா மதத்தினரையும் சேர்த்துதான் கூறினேன். சாதி வேறுபாடுகளைக் கண்டித்து அப்படி பேசினேன் அவ்வளவுதான்." என்று விளக்கமளித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்