
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, மக்களை திசைதிருப்பி, சனாதன போர்வையை போர்த்திக் கொண்டு குளிர்காய நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்த சில கருத்துகளை தெரிவித்தார். ‘பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பெண்ணினத்துக்கு எதிரான ‘சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும்’ என்றுதான் அவர் பேசினாரே தவிர, எந்த மதத்தையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்