
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள திருவள்ளுவர் சாலையில் இன்று (செப்.6) மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலை பேவர் பிளாக் கற்களால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இன்று (செப்.6) மாலை இப்பகுதியில் வசிக்கும் சிவக்குமாரின் வீட்டின் முன்பு உள்ள சாலை திடீரென பயங்கர சத்தத்துடன் உள்வாங்கியதில் 7 அடி ஆழத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்