
சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை, இந்திய மொழிகளின் மத்திய நிறுவன முன்னாள் துணை இயக்குநர் க.ராமசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால், தமிழ்மொழியானது 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செம்மொழி தமிழுக்கென ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதால், 2006-ல் இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்