
ராமநாதபுரம்: நாட்டிலேயே முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவுக்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகேயுள்ள வளமாவூரில், மீன்வளத் துறை சார்பில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்