
மதுரை: ‘‘எழுத்தும், கருத்தும்தான் சமூகத்தில் புதியனவற்றை உருவாக்கும் கருவிகள்’’ என்று புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா இன்று தொடங்கியது. இந்த புத்தகத்திருவிழா வரும் 22ஆம் தேதி வரை நடக்கிறது. தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புத்தகத்திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். எம்பி.சு.வெங்கடேசன், ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் மற்றும் எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்