
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிகையில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜை வெள்ளிக்கிழமை (அக்.13) சென்னையில் போலீஸார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிகை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவர் ஒட்டன்சத்திரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ் என்பவரிடம் கார் ஓட்டுநராகவும், அவருக்கு சொந்தமான பால் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆக.17-ம் தேதி மர்மமான முறையில் சுரேஷ்குமார் இறந்தார். அவரது உடலை, அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் (44), அம்பிளிகை மயானத்துக்கு கொண்டு சென்று இரவோடு இரவாக எரித்தார். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் அம்பிளிகை போலீஸில் புகார் அளித்ததன் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்