
நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரிக்க முதற்கட்ட நடவடிக்கையாக சிறப்பு குழு அமைக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா தெரிவித்தார்.
திருச்செங்கோடு அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக எழுந்த புகாரில் இடைத்தரகர் லோகாம்பாள் மற்றும் அரசு பெண் மருத்துவர் அனுராதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச. உமா செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய எந்த வன்முறையையும், குற்றச்செயல்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டார். எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக பொதுமக்களிடம் இருந்து ஒரு துருப்பு சீட்டு போல ஒரு தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்