
சென்னை: வணிகர்கள், நிறுவனங்களுக்கான வணிகவரி நிலுவை மேல்முறையீடு பிரச்சினைகளுக்கு முடிவுகாணும் வகையில் தமிழக அரசு அறிவித்த புதிய‘சமாதான்’ திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. சிறு வணிகர்களுக்கு வரி நிலுவை ரத்து சான்றிதழ்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
வணிகர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வணிகவரித் துறை இடையேஉருவாகும் வணிகவரி நிலுவை, மேல்முறையீடு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசால் ‘சமாதான்’ திட்டம் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு அமல்படுத்தப்படுகிறது. கடந்த2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரி நிலுவைதொடர்பாக சமாதான் திட்டம் எதுவும்அறிவிக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்