
மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல், தமிழக அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க கோயில் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் (82). வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் மறைந்தார். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் உள்ள சித்தர்பீட பக்தர்கள் அவரது மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்