
சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவு ஆன்மிக உலகுக்கு பேரிழப்பு என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமான செய்தி வேதனை தருகிறது. கோயில் கருவறைகளில் பெண்களும் சென்று வழிபாடு நடத்தும் முறையைக் கொண்டு வந்து, பாமர மக்கள்கூட அம்மன் சந்நிதானத்தில் சென்று வழிபாடு நடத்தும் வகையில் புரட்சி செய்தவர். அவரது மறைவு ஆன்மிக உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்