
சென்னை: மருந்து உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, சென்னையில் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மருந்து, ரசாயன பொருட்கள் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் சில நிறுவனங்கள் தங்களது வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்