
மதுரை: நடிகர் பாபி சிம்ஹா வழக்கில் 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா. இவருக்கு கொடைக்கானல் பேத்துப்பாறையில் பங்களா உள்ளது. இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணியை ஜமீர் என்பவரிடம் பாபி சிம்ஹா வழங்கினார். பின்னர் பாபி சிம்ஹா, ஜமீர் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிடப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பங்களா புதுப்பிக்கும் பணிக்காக ரூ.1.70 கோடி பெற்றனர். இன்னும் ரூ.30 லட்சம் கேட்கின்றனர். அது குறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர் என ஜமீர் உட்பட பலர் மீது கொடைக்கானல் போலீஸில் பாபி சிம்ஹா புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்