
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ஆளும் திமுக கவுன்சிலர்களின் அழுத்தம் காரணமாக பொறுப்பேற்ற 6 மாதத்திற்கு உள்ளாகவே ஆணையர் சங்கரன் இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகாசி மாநகராட்சியில் ஏற்கனவே பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி மீண்டும் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது இணை இயக்குநர் நிலையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்தி முடித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்