
சென்னை: இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவைக்கு நேற்று வந்தனர். இவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.
போர் காரணமாக இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்