
புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நடத்திய சோதனையின்போது பிடிப்பட்டவர் அறையில் கஞ்சா பொட்டலங்களும் சிக்கியுள்ளதால் கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடிப் பகுதியில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கு வங்க பணியாளர்கள் தங்கியிருந்த அறையில் நேற்று சோதனையிட்டனர். அப்போது கொல்கத்தாவைச் சேர்ந்த பாபுவை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். பாபு தங்கியிருந்த அறையில் சோதனையிட்டபோது புதுச்சேரி உருளையன் பேட்டை போலீஸாரும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்காக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்