
திருச்சி: அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, திமுக அமைச்சர்கள் சொத்துகளை குவித்து வருகின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்திய அரசின் நிதியுதவியுடன், இலங்கையில் மலையகத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, 10 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்