
சென்னை: வங்கக் கடலில் நிலவும் மிக்ஜாம் தீவிர புயல் தலைநகரை புரட்டிப் போட்டுள்ளது. இடைவிடாது பெய்த அதிகனமழையால் சென்னை மாநகரம் நேற்று ஸ்தம்பித்தது. போக்குவரத்து, வணிகம் முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் மிகாம்' புயல் நேற்று உருவானது. இது, நேற்று இரவுமுதல் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப் பகுதிகளில் வலுப்பெற்று 'தீவிரபுயலாக சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 90 கி.மீ. தொலைவில் நிலவியது. இது தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை, நெல்லூருக்கும் மசூலிபட்டினத்துக்கும் இடையே, பாபட்லாவுக்கு அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்