Thursday, January 18, 2024

https://ift.tt/6aFe3tw புதிய மாநகராட்சிகள் உதயம் | பாதாள சாக்கடை, கார்பன் நியூட்ரல் திட்டங்கள் இருந்தும் கோட்டைவிட்ட ராஜபாளையம்

ராஜபாளையம்: காரைக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட 6 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகும் என நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பட்டியலில் பாதாள சாக்கடைத் திட்டம், கார்பன் நியூட்ரல் ராஜபாளையம் உள்ளிட்ட மாநகராட்சிக்குரிய திட்டங்கள் இருந்தும் ராஜபாளையம் நகராட்சி இடம் பெறாதது மக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் வருவாய், மக்கள் தொகை அடிப்படையில் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல்நிலை என வரிசைபடுத்தப்பட்டு அதற்கேற்ப திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் சிறப்பு நிலை பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், சிறப்பு நிலை மற்றும் பெரிய நகராட்சிகளை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என அந்தந்த நகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...