
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கியது. கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு யோகா திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:
யோகா கலையை பற்றி உலகம் அறிவதற்கு முன்பே புதுச்சேரியில் 29 ஆண்டு காலமாக யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எனது பாராட்டை தெரிவிக்கிறேன். யோகா என்பது மனதும், உடம்பும் ஒருமைப்பட்டு செயலாற்றுவது. உடல்நலமும், மனநலமும் நன்றாக இருக்க வேண்டும். யோகா செய்பவர்கள் நன்றாக படிக்கலாம். விரைவில் மனப்பாடம் செய்துவிட முடியும். நிறைய மதிப்பெண் வாங்கலாம். யோகா செய்யும்போது மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மூளையில் உள்ள செல்கள் உற்சாகமாக இருக்கும். அதனால் குழந்தைகள் யோகா செய்வது மிகமிக முக்கியம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்