
ராமநாதபுரம்: மூன்று பெரிய மின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தமிழக அரசு குளறுபடி செய்து வருகிறது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டினார்.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருச்சியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி திட்டங்களை அளித்தார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய பொதுத்துறை நிறுவனமான பிஹெச்இஎல்(பெல்) நிறுவனத்தின் தொழில் ஒப்பந்தங்களை தமிழக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்