
ராமநாதபுரம்: குவைத் சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்க அவர்களது குடும்பத்தினர் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஜேசு(40), கார்த்திக்(22), மோர்பண்ணையைச் சேர்ந்த சந்துரு(22), தொண்டி அருகே பாசிபட்டினத்தைச் சேர்ந்த வினோத்குமார்(22) ஆகியோர், 3 மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கடந்த மாதம் 5-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்நாட்டு கடலோர காவல்படையினர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்