
திண்டிவனத்தில் இயங்கும் நகர கல்வி மேம்பாட்டுக் குழு என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணி தலைமை யில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்ட முடிவில் இயற்றப்பட்ட தீர்மானத்தில், “திண்டிவனத்தில் இயங்கும் அரசு நிதி உதவி பெறும் புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கையில் சட்டவிரோதமான ரூ.5,350 முதல் ரூ.7,750 வரை வசூல் செய்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி பிற்பகல் சேர்க்கையை தொடங்கி 17-ம் தேதி பிற்பகலோடு சேர்க்கையை முடித்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுகளிலும் இதே போல சட்டவிரோதமாக பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்